நான், என் தோழி அபி, அவளுடைய தம்பி சுவாமி, சுவாமி ஓட நண்பர்கள் பாரதி மற்றும் பிரவீன். நாங்கள் எல்லாரும் ஒரு வட்டாரம்.
நாங்கள் நெறைய விளையாட்ட விளையாடுவோம். புதுசு புதுசா கண்டுபிடிச்சு விளையாடுவோம்.
அதில் ஒரு விளையாட்டு தான் நாடு. நாங்கள் கட்டம் கட்டமா மண்ணுல கொடு போட்டு, ஒவொரு கட்டத்துக்கும் பேர் வைப்போம். இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீ லங்கா அப்படின்னு.
ஒருத்தர் குச்சியை எதாவது ஒரு நாடு மேல போடுவன். அவன் குச்சிய போட்ட வொடனே நாங்க எல்லாரும் தெரிச்சு ஓடுவோம். அந்த குச்சி எந்த நாட்டுல விழுந்துதோ, அந்த நாட்டுக்காரன் குச்சி ய எடுத்து, எங்க மேல அடிக்க பார்ப்பான். யார் மேல அடிகரனோ, அந்த நபரோட நாட்டுல ஒரு பங்க அவன் நாடா ஆகிரமசிபான். கடைசில யார் அதிகமா வசிரிகன்களோ அவங்க தன் ஜெயிப்பாங்க.
அப்புறம் 7 கல்லு அப்படின்னு ஒரு விளையாட்டு விளையாடுவோம். இதில இரெண்டு team. 7 கல்லை ஒன்னு மேல ஒன்னு வச்சு அத சுத்தி ஒரு வட்டம் போடணும். டீம் 1 பந்தை எடுத்து லேசா உறுதி விடனும். அந்த கல்லு ல கொஞ்சம் கல்லு கீழ விழும். டீம் 2 அந்த பந்த எடுத்து டீம் 1 ஏ அடிக்கணும். டீம் 2 அந்த பந்து தன் மேல விழாம எல்லா கல்லையும் எடுத்து ஒன்னு மேல ஒன்னு வச்சு, ஜெயிக்கணும்.
அப்புறம் சீட்டு கட்டு விளையாடுவோம். ரம்மி, ஆச், திருடன், அப்படின்னு எல்லா விளையடையும் விளையாடுவோம். சில சமயம் புதுசு புதுசா கண்டுபிடிச்சு விளையாடுவோம்.
பள்ளி கூடதுலேந்து எப்போ வீட்டுக்கு வருவோம் னு இருக்கும். வந்த வுடனே, கட கட னு எதோ சாப்பிட்டு, ஒடனே விளையாட போய்டுவேன்.
விடுமுறை எல்லாம் வந்த அவளோ தான். காலைல ஒருத்தர் வீடு, மத்தியானம் தூக்கம், சாயங்கலம் அபி வீடு னு ஒரே விளையாட்டு கும்மாளம் தான்.
அது ஒரு அழகிய கனா காலம். மனதினில் தினம் தினம் வந்து போகும்.
On April 28-30 we’re hosting our first live, in-person gathering in 10
years. Yes, it really has been that long. I’ve been wanting to re-infuse
live events...
12 hours ago
No comments:
Post a Comment